குடியரசுத் தலைவர் செயலகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு


ஒரு சமூகமாக நமது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு

Posted On: 06 AUG 2023 12:51PM by PIB Chennai

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6, 2023) நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின்165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்றார். இப்பல்கலைக்கழகம் அறிவைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. 165 ஆண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் உயர்தர கல்வியாளர்களைக் கண்டு பிடித்து, அறிவார்ந்த ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்கியுள்ளது. எண்ணற்ற அறிஞர்களையும், தலைவர்களையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களையும் உருவாக்கி, கற்றலின் தொட்டிலாக அது இருந்து வருகிறது. இது ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டுள்ளது, இந்தியாவின் தென் பிராந்தியத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளமான வரலாறு மற்றும் பெருமைமிக்க பாரம்பரியம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய சிறப்பு மையமாக அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்று கூறினார். அவர்களால் இளம் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னாள் மாணவர்களை அணுகி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 சென்னைப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும், பல்துறை ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடும் உலகமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னைப் பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும் என்றார்.

 

மிகவும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்குவதற்கான நிர்பந்தம், நல்ல நிறுவனங்களில் சேர முடியாது என்ற அச்சம், மதிப்புமிக்க வேலை கிடைக்காதோ என்ற கவலை மற்றும் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை ஆகியவை நமது இளைஞர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று குடியரசுத் தலைவர்  கூறினார். இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கவும் ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைவது முக்கியம். எந்தவொரு பதட்டத்தையும் மாணவர்களை ஒருபோதும் பாதிக்க அனுமதிக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

தீர்ப்புக்கு அஞ்சாமல் மாணவர்கள் தங்கள் அச்சங்கள், கவலைகள் மற்றும் போராட்டங்களைப் பற்றி விவாதிக்க வசதியாக உணரும் இருவழி தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சவால்களை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்வதற்கு நேசிக்கப்படும், மதிக்கப்படும் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட சூழலை நமது இளைஞர்கள் உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

***

SM/PKV/DL



(Release ID: 1946250) Visitor Counter : 203