குடியரசுத் தலைவர் செயலகம்

போபாலில் 'உன்மேஷா' மற்றும் 'உத்கர்ஷ்' விழாக்களை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 03 AUG 2023 3:41PM by PIB Chennai

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இன்று (03.08.2023) இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 'உன்மேஷா' எனும் சர்வதேச இலக்கிய விழா மற்றும் 'உத்கர்ஷ்' எனப்படும்- நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைகளின் விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இலக்கியம் மக்களுடன் இணைவதோடு மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கிறது என்று கூறினார். 'நான்', 'என்னுடையது' ஆகியவற்றிலிருந்து உயர்ந்து படைக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட இலக்கியங்களும் கலைகளும் மட்டுமே அர்த்தமுள்ளவை என்று அவர் கூறினார். அனைத்து இந்திய மொழிகளின் முக்கியப் படைப்புகளையும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது இந்திய இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்தும் என்று அவர் கூறினார்.

 

எமது விடுதலைப் போராட்ட இலட்சியங்களுக்கு இலக்கியம் பலம் அளித்ததாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், பல எழுத்தாளர்கள் சுதந்திரம் மற்றும் மறுமலர்ச்சியின் இலட்சியங்களை வெளிப்படுத்தினார்கள் என்று அவர் கூறினார். இந்திய மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள், கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன, மேலும் அவை நம் மனதில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

***

(Release ID: 1945410)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1945616) Visitor Counter : 125