பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ மதன் தாஸ் தேவி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2023 9:27AM by PIB Chennai
ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் திரு. மதன் தாஸ் தேவியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு. மதன் தாஸ் தேவி தனது வாழ்க்கையை தேசத்தின் சேவைக்காக அர்ப்பணித்தவர் என்று திரு. மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவருடனான தனது ஆழமான தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
"மதன்தாஸ் தேவியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்தின் சேவைக்காக அர்ப்பணித்தார். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது மட்டுமல்லாமல், எப்போதும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த துயரமான நேரத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கடவுள் வலிமையை வழங்கட்டும். ஓம் சாந்தி!"
***
AP/ANT/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1942046)
வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam