பிரதமர் அலுவலகம்

உ.பி., இடாவாவில் நடைபெற்ற ஸ்வநிதி பெருவிழாவுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 02 JUN 2023 6:28PM by PIB Chennai

உ.பி.மாநிலம் இடாவாவில் நடைபெற்ற ஸ்வநிதி பெருவிழா நிகழ்ச்சியில், அதிகபட்ச கடன் வழங்கல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"இடாவாவின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது! டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதோடு, பிரதமரின் ஸ்வநிதி திட்டத்துக்கு  அதிக அளவில் பங்களித்தவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியாகவும்  இதுபோன்ற நிகழ்வுகள் மாறி வருகின்றன."

 

***



(Release ID: 1929514) Visitor Counter : 121