மத்திய பணியாளர் தேர்வாணையம்

குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) இன்று 2023 மே 23, அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்

Posted On: 23 MAY 2023 2:32PM by PIB Chennai
  • குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5-ம்நாள் நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில், 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
  • 2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 13,090 பேர் தகுதி பெற்றனர்.
  • மொத்தம் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். 
  • பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேரை (ஆடவர் 613, மகளிர் 320) ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • இறுதியாக தகுதி பெற்றவர்களின் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர் என்றார்.
  • செல்வி இஷிதா கிஷோர் முதலிடம் பெற்றுள்ளார். தில்லி  பல்கலைக்கழகத்துக்குட்பட்ட  ஸ்ரீராம் கல்லூரியில் அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
  • செல்வி கரீமா லோஹியா 2-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
  • உமா ஹரதி 4-ம் இடம் பெற்றுள்ளார். ஐதராபாத் ஐஐடி-யில்  கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்
  • செல்வி ஸ்மிர்தி மிஷ்ரா 4-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில்  பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
  • தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் மகளிர், 11 பேர் ஆடவர் 

 

******

AP/IR/KPG/KRS



(Release ID: 1926664) Visitor Counter : 229