தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அளவீடு மற்றும் கட்டணங்கள் தொடர்பாக வெளியிட்ட வரைவு விதிமுறைகள் குறித்து வெளியான செய்திக் கட்டுரைகள் பற்றி டிராயின் விளக்கம்
Posted On:
20 MAY 2023 9:58AM by PIB Chennai
அளவீடு & கட்டணங்கள் முறையின் துல்லியம் குறித்த வரைவு விதிமுறைகள் குறித்த பிரச்சினை பற்றிய விளக்கம்.
உத்தேச விதிமுறைகள், உண்மையில், ஒரு வருடத்தில் நடத்தப்படும் தணிக்கைகள், சேவை வழங்குநர்களின் சுமையை குறைக்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் ஒவ்வொரு உரிமம் பெற்ற சேவை பகுதியை (எல்எஸ்ஏ) தணிக்கை செய்வதற்குப் பதிலாக, ஆண்டு அடிப்படையில் தணிக்கை முன்மொழியப்படுகிறது,
சேவை வழங்குநர்களால் பிழைகளைத் தானாகத் திருத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேவை வழங்குநர்களால் சரியான நேரத்தில் சரிசெய்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இது சம்பந்தமாக ஒரு சுய சான்றிதழ் தணிக்கை தேவையை பூர்த்தி செய்யும்.
தற்போது நடைமுறையில் உள்ள தணிக்கை முறையானது, ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, இது மொத்த வாடிக்கையாளர் தளத்தில் கிட்டத்தட்ட 95 சதவீத பங்களிக்கிறது.
வழங்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் உச்ச வரம்பற்றவை என்பதை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் ஒப்புக்கொண்டாலும், ஒவ்வொரு திட்டத்திற்கும் நியாயமான பயன்பாட்டுக் கொள்கை வரம்பு உள்ளது, இது நுகர்வோர் பயன்படுத்தும் சேவையின் தரம் மற்றும் அளவை தீர்மானிக்கிறது. சேவை வழங்குநர் மற்றும் கட்டுப்பாட்டாளர் மீது நுகர்வோர் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்க, தணிக்கை செயல்முறையைத் தொடர வேண்டியது அவசியமாகும்.
தணிக்கையின் போது ஏதேனும் கண்டறியப்பட்டால், அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக திருப்பித் தருமாறு சேவை வழங்குநர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
***
AD/PKV/DL
(Release ID: 1925816)