குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நாளை ஹரியானாவில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2023 5:06PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (ஏப்ரல் 24, 2023) ஹரியானா (கர்னால் மற்றும் ஹிசார்) செல்லவிருக்கிறார்.
கர்னாலில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின், தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவன 19-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வார். இதனைத் தொடர்ந்து, ஹிசாரில் செளத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.
***
SMB/CR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1918979)
வருகையாளர் எண்ணிக்கை : 190