கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, குஜராத் மாநிலம் ஜுனாகத் க்ரிஷி ஷிவிரில் மாவட்ட வங்கி தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு ஏபிஎம்சி கிசான் பவனையும் திறந்து வைத்தார்

Posted On: 19 MAR 2023 5:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி அதன் பயனைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் கூட்டுறவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இந்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடையும்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மூன்று தேசிய அளவிலான மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவ முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில கூட்டுறவு ஏற்றுமதி சங்கங்களின்  மூலம் நாட்டின் எந்த கிராமத்திலும் உள்ள விவசாயி தனது விளைபொருட்களை உலக சந்தையில் எளிதாக விற்பனை செய்து தனது விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற முடியும்.

இயற்கை விவசாயம் மட்டுமே பூமியைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அதை ஊக்குவிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

திரு அமித் ஷா தனது உரையில், பல சிரமங்களுக்குப் பிறகு, ஜூனாகத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தற்போதைய வடிவம் உருவாகியுள்ளது என்றார். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கூட்டுறவுக்கான தனி அமைச்சகத்திற்கான கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததாகவும் நாட்டின் கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார் என்றும் திரு அமித்ஷா கூறினார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு கூட்டுறவுகளை முன்னேற்ற பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறினார். டிஏபி மற்றும் யூரியாவை தொடர்ந்து பயன்படுத்தினால் அடுத்த 25 ஆண்டுகளில் பூமியை கான்கிரீட் போல மாற்றும் என்பதால் வரும் நாட்களில் தாய் பூமிக்கு சேவை செய்ய இயற்கை விவசாயமே ஒரே மாற்றாக இருக்கும் என்றார். டிஏபி மற்றும் யூரியா மண்புழு போன்ற நல்ல பாக்டீரியாவைக் கொல்லும் என்றும், வயல்களில் பாக்டீரியா இருந்தால் புதைபடிவம் மற்றும் பூச்சி பிரச்சனைகள் இருக்காது என்றும், பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார். நமது முன்னோர்களுக்கு விவசாயம் தெரியும். ஆனால் யூரியாவைச் சேர்த்தால் பயிர்கள் வளரும் என்று நினைத்தோம், அதன் விளைவாக நமது நிலம் மாசுபடுகிறது என்றார். தற்போது லட்சக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்றி அதன் பயனை பெற்று வருகின்றனர் என்றார். இயற்கை விவசாயம் செய்வதால் மகசூல் பெருகி, மழைநீர் சுரந்து, பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி அதிகரித்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என்று திரு அமித்ஷா கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்து மூன்று தேசிய அளவிலான மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்த மூன்று சங்கங்களில் இரண்டு சங்கங்கள் குஜராத் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்தச் சங்கங்களில் ஒன்றின் கீழ், இயற்கை விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளின் விளைபொருட்களும் அமுல் காப்புரிமையின் கீழ் எடுக்கப்பட்டு அதன் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இந்த முறையை முழுமையாக நடைமுறைப்படுத்திய பிறகு, யூரியா மற்றும் டிஏபி பயன்பாட்டிலிருந்து நமது நிலத்தையும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்தும் நமது உடலையும் காப்பாற்ற முடியும். நீர்மட்டம் உயர்ந்து சுற்றுச்சூழலும் காப்பாற்றப்படும் என்று திரு அமித்ஷா கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை நேரில் சந்தித்து அதை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயிர் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய ஒரு கூட்டுறவு சங்கத்தையும் ஏற்பாடு செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா கூறினார். பல மாநில கூட்டுறவு ஏற்றுமதி சங்கம், நாட்டில் உள்ள எந்தவொரு விவசாயியின் விளைபொருட்களையும் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி நிறுவனமாக செயல்படும். மேலும் அதன் பலன் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சென்றடையும். இந்த முறை அமலுக்கு வருவதன் மூலம் விவசாயிகளின் வளம் பெருகும் என்றார். நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கூட்டுறவு சங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவு, பால்பண்ணை மற்றும் மீன்வள உற்பத்திச் சங்கம் ஒரே மாதிரியான சங்கமாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பல நன்மைகளைப் பெற முடியும் என்று அமித்ஷா கூறினார். வலுவான கூட்டுறவு கட்டமைப்பின் காரணமாக இந்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைவரையும் சென்றடையத் தொடங்கும் என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மட்டுமின்றி அடுத்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கவும் உறுதி பூண்டுள்ளது என்றார். கிசான் கிரெடிட் கார்டு, எஃப்பிஓ, க்ரிஷி சிஞ்சாய் யோஜ்னா, எம்எஸ்பியில் அதிகபட்ச கொள்முதல் போன்ற விவசாயத் துறையிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய முயற்சிகளை எடுத்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவு அமைச்சகத்தின் மூலம் நாட்டின் விவசாயிகளை அரசு செழிக்கச் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

                                                                                                         -----

AD/KJ/KPG



(Release ID: 1908577) Visitor Counter : 153