குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஹோலிப் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
07 MAR 2023 5:11PM by PIB Chennai
ஹோலிப் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:
வண்ணமயமிக்க, மகிழ்ச்சிகரமான பண்டிகையான ஹோலிப் பண்டிகையையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹோலி என்பது வாழ்க்கை மற்றும் இயற்கையின் கொடையின் கொண்டாட்டமாகும். இது நமது உறவுகளை வலுப்படுத்தவும், மன்னிக்கவும், மறக்கவும், வசந்தத்தின் புதிய தொடக்கங்களை வரவேற்ககூடிய நேரம்.
ஹோலியின் சிறப்பான வண்ணங்கள் நமது கலாச்சார பன்முகத்தன்மையின் செழுமையையும், நம் மக்களிடையே உள்ள நல்ல இயல்பான உணர்வையும் பிரதிபலிக்கின்றன. இந்தத் தருணத்தில் நமது சகோதரத்துவ இணைப்பை வலுப்படுத்துவதற்கும், இயற்கை அன்னையுடன் மீண்டும் இணைவதற்கும் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். இந்த வண்ணத் திருவிழா நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், அன்பையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.
***
AP/IR/RJ/RJ
(Release ID: 1904923)