தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா பிரியதர்ஷனின் ‘அப்பத்தா’வின் உலக பிரிமீயர் காட்சியுடன் தொடங்குகிறது
Posted On:
26 JAN 2023 3:06PM by PIB Chennai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா "அப்பாத்தா" என்ற தமிழ் திரைப்படத்தின் உலக பிரிமீயர் அரங்கேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இந்தப் படத்தை பத்ம விருது மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இதன் இணை தயாரிப்பாளர்கள்.
இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது 700வது படமாகவும், இந்திய திரையுலகில் 51 வருடங்களாக கோலோச்சி வரும் இயக்குநர் பிரியதர்ஷன் 1993 இல் மிதுனம் படத்திற்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து மூத்த நடிகை ஊர்வசியுடன் மீண்டும் இயக்கியுள்ளார்.
அப்பத்தா திரைப்படத் திரையிடல் மூலம் விழாவைத் தொடங்கி வைத்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், “2022-23 ஆம் ஆண்டுக்கான எஸ்சிஓவின் இந்தியாவின் தலைவர் பொறுப்பைக் குறிக்கும் வகையில் எஸ்சிஓ திரைப்பட விழாவை நடத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கான இந்தியாவின் குறிக்கோள், எஸ்சிஓ பிராந்தியத்தில் இருந்து திரைப்படங்களின் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு வகையான திரைப்படத் தயாரிப்பைக் காண்பிப்பதாகும். சினிமா கூட்டாண்மைகளை உருவாக்குதல், நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளுதல், இளம் திரைப்படத் திறன்களை வளர்ப்பது, இந்த தனித்துவமான பிராந்தியத்தின் கலாச்சாரங்களுக்கிடையே பாலமாகச் செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். திரு பிரியதர்ஷனின் அப்பத்தா திரைப்படத்தின் உலக முதல் காட்சியுடன் விழாவைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அன்பையும், நமது செல்லப்பிராணிகளுடனான பிணைப்பைக் கூறுகின்ற மனதைத் தொடுகின்ற கதை. எஸ்சிஓ திரைப்பட விழா ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஐந்து நாட்களில் எண்ணற்ற துடிப்பான கலாச்சாரங்கள், அழகியல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் திரையிடப்பட உள்ளன’’ என்று கூறினார்.
திரைப்பட விழா தொடக்க விழாவில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அப்பத்தா இயக்குனர் பிரியதர்ஷன், “இந்த மதிப்புமிக்க நிகழ்வில் அப்பத்தா தொடக்கப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்குப் பெருமை. இந்த எளிய மற்றும் அழகான கதையை என்னிடம் கொண்டு வந்ததற்காக எனது தயாரிப்பாளர்களான ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இத்திரைப்படத்தில் ஒத்துழைப்பது மகிழ்ச்சியாகவும், ஊர்வசி போன்ற ஒரு அற்புதமான திறமையாளருடன் அவரது மைல்கல்லான 700 வது படத்தில் பணிபுரிவதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பாடா நான் முன்பு முயற்சித்த எதையும் விட வித்தியாசமானது, பார்வையாளர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எஸ்சிஓ திரைப்பட விழாஇன் திரைப்படத் திரையிடல்கள் மற்றும் அமர்வுகள் மும்பையில் இரண்டு இடங்களிலும், பெடர் சாலையில் உள்ள திரைப்படப் பிரிவு வளாகத்தில் 4 அரங்குகளிலும், வொர்லியில் உள்ள நேரு கோளரங்க கட்டிடத்தில் என்எஃப்டிசி திரையரங்கிலும் நடைபெறும். எஸ்சிஓ நாடுகளில் இருந்து மொத்தம் 57 படங்கள் காட்சிப்படுத்தப்படும். போட்டிப் பிரிவில், 14 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
பிரதிநிதிகள் பதிவுகளை ஆன்லைனில் sco.nfdcindia.com அல்லது திருவிழா நடைபெறும் இடத்தில் செய்யலாம்.
எஸ்சிஓ திரைப்பட விழா பற்றி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவை (எஸ்சிஓ திரைப்பட விழா) தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனத்தால், எஸ்சிஓ மாநிலத் தலைவர்கள் கவுன்சிலுடன் இணைந்து ஜனவரி 27 முதல் 31 வரை நடத்துகிறது. மும்பையில் எஸ்சிஓ திரைப்பட விழா எஸ்சிஓவில் இந்தியாவின் தலைமைப் பதவியை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*****
AP / PKV / DL
(Release ID: 1893943)
Visitor Counter : 220