சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2021-22 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.122.47 கோடி வழங்கிய ஹெச்எல்எல் நிறுவனம்
Posted On:
11 JAN 2023 12:35PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹெச்எல்எல் லைஃப் கேர் நிறுவனம் 2021-22 நிதியாண்டில் மத்திய சுகாதாரத்துறைக்கு ரூ.122.47 கோடி ஈவுத்தொகையை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஹெச்எல்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பெஜி ஜார்ஜ், நிர்மால்பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவிடம் வழங்கினார்.
2021-22-ம் நிதியாண்டில் எச்.எல்.எல் நிறுவனம் ரூ.35,668 அமைச்சர் கோடி வருவாய் ஈட்டியதோடு, ரூ.551.81 கோடி லாபம் ஈட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்றின்போது அந்நிறுவனம் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டிப் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “அவசர கால மருத்துவப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில், எச்எல்எல் முக்கியப்பங்கு வகித்து கொரோனா தொற்று மேலாண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உதவி செய்தது. அவசர கால மருத்துவப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், விநியோகம் செய்வதற்கும் முனையமாக செயல்பட்டு, கொரோனா தொற்று சிகிச்சை மேலாண்மையில் நெருக்கடி நேரத்தில் நேர மேலாண்மையை செயல்படுத்தியது” எனக் கூறினார்.
பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்டிருந்தாலும், அவற்றின் செயல்பாடு எப்போதும் திருப்திகரமாக இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுத்துறை நிறுவனங்களின் நிலைத்தன்மை குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அவர், "நிதி ஒழுங்குமுறை மற்றும் பொறுப்பான நடத்தை ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் நிலைத்தன்மைக்கான முக்கிய அம்சங்கள்" என்று சுட்டிக்காட்டினார்.
மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், எச்எல்எல் நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து கொரோனா தொற்று காலத்தில் அந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
ஹெச்எல்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பெஜி ஜார்ஜ் பேசுகையில், ஹெச்எல்எல் மீது நம்பிக்கை வைத்து, மத்திய அரசின் பல்வேறு துறைகள் குறிப்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய ஆதரவிற்கும், ஒத்துழைப்பிற்கும் தனது மனமார்ந்த நன்றியையும், ஒப்புதலையும் தெரிவித்தார்.
ஹெச்எல்எல் நிறுவனமானது 1966-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு ஆதரவாக கருத்தடை மருந்துகளை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. மகப்பேறு, சுகாதாரம் போன்ற முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி விரிவாக்கும் போது, ஹெச்எல்எல் நிறுவனமானது மருத்துவமனை தயாரிப்புகள், மருத்துவமனை உள்கட்டமைப்பு மேலாண்மை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் ஆலோசனை, சிகிச்சைகள், மருந்துகளின் சில்லறை விற்பனை போன்ற பிற சுகாதாரப் பிரிவுகளிலும் பன்முகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அமைச்சகம் மற்றும் எச்எல்எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
TV/CR/RJ
(Release ID: 1890267)