மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

2022-ல் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 28 DEC 2022 3:40PM by PIB Chennai

கால்நடைப் பராமரிப்பு துறையின் சாதனைகள் மற்றும் முன்முயற்சிகள்

நாடு தழுவிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தின் நான்காம் கட்டம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் மேற்கொள்ளப்பட்டது. 604 மாவட்டங்களில் செயற்கைக் கருவூட்டல் மூலம் 3.3 கோடி விலங்குகள் பயன்படுத்தப்பட்டன. இத்திட்டம் ராஷ்டிரிய கோகுல் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட புதிய முன்முயற்சியாகும்.

ராஷ்டிரிய கோகுல் இயக்கத்தின் கீழ் அரசு விந்து நிலையங்களில் 27.86 லட்சம் டோஸ் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தனியார் விந்து நிலையங்கள் மற்றும் பால் சம்மேளனங்களிலிருந்து 31.12 லட்சம் டோஸ்கள் சேகரிக்கப்பட்டன.

நவீன கருவூட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரணுக்கள் மேம்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியுடன் தொடர்புடைய 3 சிறந்த பால்பண்ணை விவசாயிகள், 3 சிறந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பவியலாளர்கள், 3 சிறந்த பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய பால் தினமான நவம்பர் 26-ந் தேதி தேசிய கோபால ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வணிக ரீதியில் சாத்தியமான தீர்வுகளையும், புத்தாக்கத்தையும் செயல்படுத்த கால்நடைப் பராமரிப்பு துறை 2021-22-ல் மிகப் பெரிய ஸ்டார்ட் அப் சவால் திட்டம் 2.0-க்கு ஏற்பாடு செய்தது.

தேசிய பால் தினமான நவம்பர் 26-ந் தேதி நவீன வசதிகளுடன் கூடிய தொழில் வல்லுனர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

ராஷ்டிரிய கோகுல் இயக்கத்தின்  கீழ் உலகிலேயே முதன் முதலாக எருமை மாடுகளை தேர்வு செய்ய மரபணு அடிப்படையில், வரிசை முறை சிப் ஒன்று ராஷ்டிரிய கோகுல் இயக்கத்தின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டது. இது எருமைகளின் எண்ணிக்கையை பெருமளவுக்கு அதிகரிக்க உதவும்.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், டென்மார்க் அரசின் உணவு, வேளாண்மை மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு இடையே கோபன்ஹெகன் நகரில் மே 2-ந் தேதி கூட்டு பிரகடனம் கையெழுத்தானது. கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் ஒத்துழைப்பை வழங்க இது வகை செய்கிறது.

2022 ஜனவரி முதல் நவம்பர் வரை (நவம்பர் 21-ந் தேதி நிலவரப்படி) 7 மாநிலங்களில் ரூ.355.25 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டங்களுக்கு (மத்திய அரசின் பங்கு ரூ.244.14 கோடி) திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள தொழிலுடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் 23.70 லட்சம் புதிய உழவர் கடன் அட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் சார்பில் தகவல் பலகை ஒன்றை ஜூன் 7-ந் தேதி மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபலா தொடங்கி வைத்தார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் மொத்தம் 9 வெபினார்களுக்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மீன்வளர்ப்பு விவசாயிகள், தொழில் முனைவோர் மாணவர்கள், ஆராய்ச்சி அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட 6,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பன்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என இந்தாண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் மீன் உற்பத்தித் திட்டத்தின் கீழ் ரூ.127.71 கோடி மதிப்பில் இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது. தமிழக அரசின் கருத்துருவை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது. கடற்பாசி விவசாயிகளுக்கு உயர்தரமான தாவர உபகரணங்களை விநியோகித்தல், புதிய உற்பத்தியை உருவாக்க நவீன ஆய்வகங்களை அமைத்தல், நீர் மற்றும் கடற்பாசி உற்பத்திப் பொருட்களின் தரத்தை சோதனையிட சோதனைக் கூடங்கள் ஆகியவற்றை அமைப்பதுடன் இவை அனைத்திற்கும் தொழில் முனைவோருக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்குதல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

சென்னை, பாராதீப், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள 4 மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்கப்படும் என்றும் மல்லத் பந்தர் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான மொத்த செலவான ரூ.615.28 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

**************

SM/PKV/RR/GK



(Release ID: 1887100) Visitor Counter : 187