தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

போதிய அளவில் ஃபைபர் நெட்வொர்க்

Posted On: 23 DEC 2022 1:26PM by PIB Chennai

30.09.2022 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 35.5 லட்சம் ரூட் கிமீ ஆப்டிகல் ஃபைபர் கேபிள்  ஏற்கனவே போடப்பட்டுள்ளது. இது சிறந்த அலைவரிசை, மீள்தன்மை மற்றும் அதிக அளவு இணைப்புக்கான அதிகரித்து வரும் தேவையை எளிதாக்கும். ஆப்டிகல் ஃபைபர் கேபிள் 5ஜி இணைப்பைக் கையாளும் மகத்தான திறனைக் கொண்டுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்துவதற்கு வசதியாக, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்திய டெலிகிராப் வழி விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள் 5ஜி சிறிய செல்கள் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கேபிளை தற்போதுள்ள தெரு உள்கட்டமைப்பில் பயன்படுத்த வழி வகுக்கின்றன.

அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நகர்ப்புற மற்றும் தொலைதூரப் பகுதி இணைப்புகளை வலுப்படுத்த ஆப்டிகல் ஃபைபர் கேபிளை அமைத்துள்ளன. மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்கள் போதுமான அளவில் இணைக்கப்பட்டுள்ளன. பாரத்நெட் திட்டம் நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும்  ஃபைபர் இணைப்பை வழங்குவதற்காக  செயல்படுத்தப்படுகிறது. பாரத்நெட் திட்டத்தின் நோக்கம் நாட்டிலுள்ள தொலைதூரங்களில் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

**************

PKV/GK



(Release ID: 1886028) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Marathi , Telugu