எஃகுத்துறை அமைச்சகம்

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்திற்கு சிறந்த நிறுவனத்திற்கான விருது: மாநில அமைச்சர் டாக்டர் கே. பொன்முடி வழங்கினார்

Posted On: 17 DEC 2022 11:38AM by PIB Chennai

நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்திற்கு, 2022-ஆம் ஆண்டிற்கான இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் சிறந்த தொழில்துறை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற 37-வது இந்திய பொறியியல் மாநாட்டில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே. பொன்முடி  நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக இந்த விருதை வழங்கினார். தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக அதன் தலைமைப் பொது மேலாளர் திரு என். ஆர். கே. பிரசாத் விருதைப் பெற்றுக் கொண்டார்.

 

நிறுவனத்தின் வர்த்தகம், நிதி, சுற்றுச்சூழல் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்த பிறகு இந்த விருதுக்கு தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் தேர்வு செய்யப்பட்டது. நாட்டின் முன்னணி நிறுவனமாக தொடர்ந்து நீடிக்கவும், சர்வதேச நிறுவனமாக உயரவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பொருளாதார மற்றும் செயல்திறன் வாய்ந்த அணுகுமுறையுடன் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் தனது திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது.

*******

AP/RB/DL



(Release ID: 1884369) Visitor Counter : 173