சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் உள்ள பல அரசு மருத்துவமனைகளுக்கு 265 டிப்ளமேட் ஆஃப் நேஷனல் போர்டு (டிஎன்பி) முதுகலை மருத்துவ இடங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது

प्रविष्टि तिथि: 08 NOV 2022 12:01PM by PIB Chennai

ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடு முழுவதும் சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன்,  மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) தீவிர பங்களிப்புடன் 265 டிப்ளோமேட் ஆஃப் நேஷனல் போர்டு (டிஎன்பி) முதுகலை மருத்துவ இடங்களை ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள 20 மாவட்டங்களின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு  மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்த முக்கியமான நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மக்கள் பயனடைவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் மருத்துவர்களும் தங்கள் சொந்த பிராந்தியத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த உள்நாட்டு மருத்துவப் பணியாளர்களைத் தட்டுவதன் மூலம் யூனியன் பிரதேசத்தில் பயனுள்ள சுகாதார விநியோக முறைக்கு வழிவகுக்கும்.

இதன் விளைவாக, தற்போது விரிவாக்கத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 20 மாவட்டங்களில் 250க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இரண்டாம் கட்டத்தில் மேலும் இரண்டு முதுகலை பட்டப் படிப்புக்கான இடங்கள் வழங்கப்படும். மேலும், முதுநிலைப் பட்டதாரி பயிற்சிக்கான வாய்ப்பை வழங்குவதற்காக, 50% முதுநிலைபட்டப் படிப்புக்கான  இடங்கள் உள்ளூர் சேவை மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்காக, மத்திய அரசு யூனியன் பிரதேசத்திலேயே தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

*****

MSV/SMB/IDS


(रिलीज़ आईडी: 1874467) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu