பிரதமர் அலுவலகம்

மகா நவமி தினத்தன்று மா சித்திதாத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்கிறார்

Posted On: 04 OCT 2022 9:01AM by PIB Chennai

நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளான  மகா நவமி தினத்தன்று மா சித்திதாத்ரியிடம் பிரார்த்தனை செய்து, அனைவரின் வாழ்வும் வெற்றி பெற பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசி வேண்டி பிரார்த்தனை செய்தார். மா சித்திதாத்ரியின் பிரார்த்தனைகளையும் (ஸ்துதி) திரு மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

 

விஶ்வகர்த்ரீ விஶ்வர்த்ரீ விஶ்வஹர்த்ரீ விஶ்வப்ரீதா ।

 

விஶ்வார்சிதா விஶ்வதிதா ஸித்திதாத்ரி நமோஸ்து தே

 

நவராத்திரி விழாவில் ஒன்பதாம் நாளான  மகாநவமி தினம் அன்னை சித்திதாத்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அனைவரும் கடமையின் பாதையில் பயணித்து உத்வேகம் பெறவும், அதே போல் வாழ்க்கையில் வெற்றி பெறவும்  மனமார்ந்த வாழ்த்துக்கள்!" என்று சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்;

********



(Release ID: 1864998) Visitor Counter : 153