வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன: திரு பியூஷ் கோயல்

Posted On: 10 SEP 2022 12:21PM by PIB Chennai

இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன என்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் பேசினார்.

இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது என்று கூறிய மத்திய அமைச்சர், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும் என்றார்.

அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும் போது, இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858245

•••••••••••••

 



(Release ID: 1858305) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Marathi , Hindi