பாதுகாப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படையின் ரேடார் நிலையத்தை பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2022 3:17PM by PIB Chennai
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், இன்று, இந்திய விமானப் படையின் ரேடார் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஒருங்கிணைந்த ஏர் கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்த அமைப்பு, இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகவும், செயல்பாட்டுக் கருவியாகவும் உள்ளது.
இந்த பயணத்தின்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், போர் விமானங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், போக்குவரத்து மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் போர் விமானம் ஆகியவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855242
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1855281)
வருகையாளர் எண்ணிக்கை : 214