சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சமூக அதிகாரம் அளிக்கும் முகாம் மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுப்பூரில் நடைபெற்றது

Posted On: 01 AUG 2022 12:48PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு உதவிகள் வழங்குதல் ஆகியவற்றுக்கு மணிப்பூர் சமூக நலத்துறையும், பிஷ்ணுப்பூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து சமூக அதிகாரம் அளித்தல் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக் இந்த முகாமை தொடங்கிவைத்தார். இவருடன் மணிப்பூர் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிமா பவுமிக், மணிப்பூர் மாநிலத்திற்கு 70 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் நிதி விடுவித்திருப்பதன் மூலம் 1180 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார். மத்திய அரசின் திட்டங்களை கூடுதலான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த அவர்களுக்கு தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு மாநில அரசை அவர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக வட்டார மற்றும் ஊராட்சி நிலையில் 170 மாற்றுத்திறனாளிகளுக்கும், 1029 மூத்த குடிமக்களுக்கும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மொத்தம் 5706 உதவிகளும் ரூ.129.98 லட்சம் மதிப்பிலான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846904

***************



(Release ID: 1846961) Visitor Counter : 146