ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜூலை 29 அன்று, சர்வதேச நிதிச்சேவை மையமான, குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்துக்கு செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUL 2022 3:20PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜூலை 29 2022 அன்று, இந்தியாவின் முதல் சர்வதேச நிதிச்சேவை மையமான, குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்துக்கு செல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர படேல், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர்கள் திரு. பங்கஜ் சௌத்ரி மற்றும் டாக்டர். பகவத் கிஷண்ராவ் கரட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த பயணத்தின்போது, சர்வதேச நிதிச்சேவை மைய ஆணைய தலைமையக கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844609

 

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1844683) வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati