பிரதமர் அலுவலகம்

திரு நரசின்பாய் படேல் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 21 JUL 2022 9:52PM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர் திரு நரசின்பாய் படேலின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.

 ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 “நவசாரி சுதந்திர சேனாவைச் சேர்ந்த திரு நரசின்பாய் படேலின் மறைவை அறிந்து மிகவும் துயரடைந்தேன். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”.

***************

(Release ID: 1843636)



(Release ID: 1843700) Visitor Counter : 131