பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திரு ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் விவாதித்தனர்

Posted On: 22 JUN 2022 12:58PM by PIB Chennai

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே  பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து புதுதில்லியில் இன்று  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் திரு ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் விவாதித்தனர். கொவிட் தொற்று சவால்களுக்கிடையே  இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்து, இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான கூட்டு நடவடிக்கை குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் சாதன ஒத்துழைப்பு தொடர்பாக  இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் உறுதி பூண்டனர்.

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்களுக்கிடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட “ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை” தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836176  

 ***************



(Release ID: 1836201) Visitor Counter : 234