பிரதமர் அலுவலகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 08 JUN 2022 11:25AM by PIB Chennai

பிரான்சில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனையுடன், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;

“வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த அவனி லேக்ராவுக்கு  வாழ்த்துகள். எதிர்கால வெற்றியின் உச்சத்தை அடையவும், மற்ற வீரர்களை ஊக்குவிக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

***************



(Release ID: 1832020) Visitor Counter : 153