பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை திரு அமித்ஷா நாளை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

Posted On: 06 JUN 2022 2:05PM by PIB Chennai

விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா நாளை புதுதில்லியில் தொடங்கிவைக்கிறார்.

பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கண்காணிக்கும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நெறிமுறைகளையும் வகுக்கும்.

பிரதமரின் தலைமையின் கீழ் பழங்குடியினர் நலன் அமைச்கத்தின் சாதனைகள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.  பழங்குடியினரின் நடனமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலை தளங்களில் ஒலிபரப்பப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831494

***************



(Release ID: 1831549) Visitor Counter : 459