தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத்துறையின் வரலாற்று சிறப்புமிக்க முன் முயற்சி – அரசு தனியார் பங்களிப்பு வாயிலாக 5 ஜி / ஓரான் பரிசோதனை சூழல் முறையில் இந்தியா முன்னிலை

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2022 5:43PM by PIB Chennai

தொலைத்தொடர்பு துறையின் தொழில் நுட்ப பிரிவான தொலைத்தொடர்பு பொறியியல் மையம்,  5 ஜி, நெட்வொர்க்கிங், கிளவுடு, &  செயலிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சாதன உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள  திருவாளர்கள், விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில்,தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் திரு ஏஎஸ் வர்மா, விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில்  தலைமை செயல் அதிகாரி திரு நிசாமுல்ஹக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்  நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824200


(வெளியீட்டு அடையாள எண்: 1824216) வருகையாளர் எண்ணிக்கை : 296
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali