சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கவுகாத்தி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2022 12:30PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 223 வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு நொங்மெய்காபம் கோடீஸ்வர் சிங்-கை, தலைமை நீதிபதியின் அலுவலகப் பணிகளைச் செய்ய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.  கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான திரு  சுதன்ஷு துலியா, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பொறுப்பில் இருந்து விலகுகிறார்.

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1823637) வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi