ரெயில்வே அமைச்சகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக இந்திய ரயில்வே மற்றும் சி-டாட் இணைந்து செயல்பட உள்ளன

Posted On: 28 APR 2022 2:31PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகம், டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துடன் (சி-டாட்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் 27 ஏப்ரல் 2022 புதன்கிழமை அன்று கையெழுத்திட்டதுரயில்வேயில் சி-டாட்டின் தொலைதொடர்பு தீர்வுகள் மற்றும் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சி-டாட் மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து இந்திய ரயில்வேயில் தொலைத்தொடர்புகளை நவீனமயமாக்கும் வகையில் கீழ்கண்டவற்றில் இணைந்து செயல்படும்:

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக எல்டிஈ-ஆர் தொழில்நுட்பத்தை உலகத்தரத்தில் பின்பற்றுதல்மேக் இன் இந்தியா கொள்கையின்படி 5ஜி பயன்பாடுபொருட்களின் இணையம்இயந்திரங்களுக்கான செயல்பாடுகள்ஒன்றிணைந்த நெட்வொர்க் மேலாண்மை இயக்கம்கண்ணாடி இழை கண்காணிப்பு/நெட்வொர்க் மேலாண்மைகாணொலி மென்பொருள்உரையாடல் பயன்பாடுரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகள் ஆகிய பிரிவுகளில் இணைந்து செயல்படவுள்ளன.

சி-டாட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு ராஜ்குமார் உபாத்யாய் மற்றும் தொலைத்தொடர்பு/ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் திருமதி அருணா சிங் மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரயில் இயக்கம்பொதுமக்கள் பாதுகாப்புஉள்நாட்டு மலிவு விலை தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைகளை வழங்கல் உள்ளிட்டவற்றில் சி-டாட் மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையேயான ஒருங்கிணைப்பு உதவுவதோடுநாட்டில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கிறது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820909

------------



(Release ID: 1820967) Visitor Counter : 189