விவசாயத்துறை அமைச்சகம்

‘விவசாயிகள் பங்கேற்பு எங்களின் முன்னுரிமை’ என்ற இயக்கத்தை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 25 APR 2022 4:31PM by PIB Chennai

விவசாயிகள் பங்கேற்பு எங்களின் முன்னுரிமை’ என்ற இயக்கத்தின் கீழ், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயல்பாடுகளை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் 26.04.2022 அன்று தொடங்கி வைக்கிறார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் 2022 ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெறும்.

இந்த ஒரு வார கால இயக்கத்தின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும், அதனுடன் தொடர்புடைய உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், கால்நடை பராமரிப்பு அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம், கூட்டுறவு அமைச்சகம் ஆகியவையும் இணைந்து ஏராளமான விவசாயிகளிடம் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் சேவை மையங்கள் ஏற்பாடு செய்துள்ள பயிர்க் காப்பீடு குறித்த பயிலரங்கை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கி வைப்பார். வர்த்தக அமைச்சகம் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் என்பது குறித்த இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்படும்.

நாடு முழுவதிலுமிருந்து நேரடியாகவும், இணையம் வழியாகவும் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819852

***************



(Release ID: 1819915) Visitor Counter : 130