பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

தேசிய பழங்குடியின விடுதலை போராட்ட வீரர்களின் அருங்காட்சியகத்தை விரைவுபடுத்துவதற்கான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு போபாலில் நடைபெற்றது

Posted On: 10 APR 2022 10:25AM by PIB Chennai

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் தொடர்பான ஒரு தேசிய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசின் பழங்குடியின விவகார அமைச்சகம், குஜராத் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை இணைந்து ஏப்ரல் 7 மற்றும் 8-ந்தேதி இந்த இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தியது. பழங்குடியினர் வரலாறு, விடுதலைப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைப்பதில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கைவினைக் கலைஞர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி தில்லி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த வெளியில் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, சத்தீஷ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பழங்குடியினர் கவுரவ தினத்தன்று ஜார்க்கண்டில் பகவான் பிர்சா முண்டா பழங்குடியினர் விடுதலைப்போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன் தொடர்ச்சியாக அருங்காட்சியகங்கள் அமைப்பதை விரைவுபடுத்துவது தொடர்பான கருத்தரங்கு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815357

 

***************



(Release ID: 1815396) Visitor Counter : 246