பாதுகாப்பு அமைச்சகம்

பினாகா எம்கே-1 ராக்கெட் சிஸ்டம் டிஆர்டிஓ, இந்திய ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து பார்க்கப்பட்டது

Posted On: 09 APR 2022 5:35PM by PIB Chennai

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து பொக்ரான் தளத்திலிருந்து பினாகா எம்கே-1 (மேம்படுத்தப்பட்டது) ராக்கெட் சிஸ்டம் (இபிஆர்எஸ்) மற்றும் பினாகா பகுதி மறுப்பு ஆயுதம் (ஏடிஎம்) ஆகியவை வெற்றிகரமான ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. கடந்த 14 நாட்களில் பல்வேறு தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆர்எஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.அனைத்து ஏவுதலிலும், தேவையான துல்லிய தொலைவு இலக்கு எட்டப்பட்டது. இந்த சோதனையுடன், இபிஆர்எஸ் ராக்கெட்டுகளை தொழில் முறையில் தயாரிக்கத் தேவையான நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தயாரிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

புனேயில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புனேயைச் சேர்ந்த டிஆர்டிஓ-வின் உயர் ஆற்றல் ஆராய்ச்சி சோதனைக்கூடத்தின் ஒத்துழைப்புடன்,பினாகா ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

இபிஆர்எஸ் என்பது பினாகா ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது கடந்த பத்தாண்டுகளாக இந்திய ராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கும் தூர இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, வெற்றிகரமான சோதனையில் சம்பந்தப்பட்ட குழுவினரைப் பாராட்டினார்.

****

 



(Release ID: 1815247) Visitor Counter : 295