மத்திய அமைச்சரவை

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 MAR 2022 1:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி,  சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து  புதுமையான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுடன், தொற்றுநோயியல், மருந்து, மூலக்கூறு உயிரியல், மருத்துவ பூச்சியியல், ஒட்டுண்ணியியல், தடுப்பு மருந்து, நுண்உயிரியல் மற்றும் தொற்றுநோயியல், துறைகளில் நோய்த் தடுப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள், நோய் கண்டறிதல் மற்றும் வெப்பமண்டல தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804288

***************



(Release ID: 1804434) Visitor Counter : 161