ஊரக வளர்ச்சி அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக புதிய இந்தியாவின் பெண் என்ற தலைப்பில் சிறப்பு வாரவிழாக் கொண்டாட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
07 MAR 2022 1:48PM by PIB Chennai
விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசு, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை சிறப்பு வாரவிழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கி 13ம் தேதி வரை நடத்த உள்ளன . புதிய இந்தியாவின் பெண் என்ற தலைப்பில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, தேசிய மற்றும் மாநில அளவில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒரு துணைத்தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஒவ்வொரு ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் பயிற்சி பெறும் மகளிர் குழுவை உருவாக்குதல், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான ஈட்டும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் 75 மகளிர் சுயவேலைவாய்ப்புக் குழுக்களை பாராட்டுதல், ஒவ்வொரு மாவட்டத்திலும் 750 ஊரக பெண் பயனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி வழங்குதல் ஆகியவை இந்த வாரவிழாவில் நடைபெற உள்ளன .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803538
***********************
(रिलीज़ आईडी: 1803731)
आगंतुक पटल : 276