ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரி மாதத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் செயல்திறன்

प्रविष्टि तिथि: 17 FEB 2022 4:43PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎப்) ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது, பயணிகள் பகுதி, பயணிகளுடன் தொடர்புடைய பணிகள் ஆகியவற்றை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  ரயில்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கான பணிகளில் ஆர்பிஎப் பணியாளர்கள்  அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளனர்.  பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதும், அவர்களது தலையாய பணிகளாகும்.  2022 ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு செயல்பாடுகளில் ஆர்பிஎப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மிஷன் ஜீவன் ரக்ஷா என்ற இயக்கத்தின் கீழ் ஆர்பிஎப் ஊழியர்கள் 20 ஆண்கள், 22 பெண்களை  ஜனவரி மாதத்தில் விபத்தில் சிக்காமல் காப்பாற்றியுள்ளனர்.  ஆபரேஷன் நன்ஹே பரிஸ்டே என்ற தலைப்பிலான  திட்டத்தில் 1045 குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றியுள்ளனர். இந்திய ரயில்வேயில் 132 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 மகிளா சுரக்ஷா என்ற பெயரிலான இயக்கத்தின் கீழ் ஜனவரி மாதத்தில் தனியாக பயணம் செய்து குற்றச்செயல்களால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிரை துன்புறுத்துதல் மற்றும் கேலி, கிண்டல் செய்தது தொடர்பாக முறையே, மகளிர் பெட்டிகளில் பயணம் செய்த 5 பேர், 2185 பேரை ஆர்பிஎப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயில் மூலம் கடத்தி செல்லப்பட்ட 22 மைனர்கள் உள்பட 35 பேரை ஆர்பிஎப் காவலர்கள் மீட்டதுடன் 8 பேரை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆபரேஷன் அமானத் என்ற பெயரில் 1552 பயணிகளுக்கு சொந்தமான உடைமைகள் மீட்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.2.8 கோடி ஆகும். ஜனவரி மாதத்தில் ரூ.4.57 கோடி மதிப்புள்ள போதை மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டு அது தொடர்பாக 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விரிவான விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799055

***************


(रिलीज़ आईडी: 1799099) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , English , Urdu , हिन्दी , Punjabi