ரெயில்வே அமைச்சகம்

சென்னை-பெங்களூரு- மைசூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு

Posted On: 11 FEB 2022 2:44PM by PIB Chennai

சென்னை-பெங்களூரு- மைசூரு, தில்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், மும்பை- ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது.

தில்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, வாரணாசி-ஹவுரா, தில்லி- அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த 8 வழித்தடங்களில் எந்த ஒரு திட்டத்திற்கும் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

***************



(Release ID: 1797594) Visitor Counter : 240