உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

குறுதொழில் நிறுவனங்களுக்கு தற்சார்பு இந்தியா உதவித் தொகுப்பு

Posted On: 04 FEB 2022 2:13PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை, மத்திய நிதியுதவியுடன் கூடிய, பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறுதொழில் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,  10ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின்கீழ், 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு மான்ய வசதியுடன் கூடிய கடனுதவி வாயிலாக, 2லட்சம் உணவு பதப்படுத்தும் குறுதொழில் நிறுவனங்களைத் தொடங்க/மேம்படுத்த நிதியுதவிதொழில்நுட்ப உதவி மற்றும் வர்த்தக ஆதரவு அளிக்கப்படுவதாகக் கூறினார்

கடன் வசதி பெறுவதை, முறைப்படுத்தப்பட்ட வினியோகச் சங்கிலியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் வணிக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலை வலுப்படுத்துவதோடுபொது சேவைகள் அதிகளவில் கிடைக்கச் செய்யவும், தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பிரிவுகளை வலுப்படுத்தி, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டிருப்பதாகவும் திரு.பிரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.  

முழு விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795404

                                                                                    *****



(Release ID: 1795462) Visitor Counter : 155