இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குளிர்கால ஒலிம்பிக்கிற்கு செல்லும் முகமது ஆரிப் கான் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்

Posted On: 07 JAN 2022 3:53PM by PIB Chennai

சீனாவின் பெய்ஜிங்கில் இவ்வருடம் பிப்ரவரியில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் வரை, ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப் கானை டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) முதன்மை குழுவில் சேர்க்க விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.

 

குளிர்கால ஒலிம்பிக்கில் ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் நிகழ்வுகளில் கான் பங்கேற்பார். சீனாவில் நடைபெறும் மாபெரும் நிகழ்வுக்கு முன்னதாக, ஐரோப்பாவில் பயிற்சி மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு டாப்ஸின் கீழ் அவருக்கு ரூ 17.46 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கானின் தற்போதைய பயிற்சி தளம் ஆஸ்திரியாவில் உள்ளது, அங்கு அவர் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோ நிபுணருடன் இருக்கிறார்.

 

குளிர்கால ஒலிம்பிக்கிற்கு கான் தகுதி பெற்றதிலிருந்து 35 நாட்கள் ஐரோப்பிய பயிற்சி முகாமிற்கு மிஷன் ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் மாண்டினீக்ரோவில் நடந்த போட்டியில் ராட்சத ஸ்லாலோமில் ஒதுக்கீட்டு இடத்தை அவர் வென்றார்.

 

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக,ஸ்லாலோம் நிகழ்வுக்கான ஒதுக்கீட்டு இடத்தை அவர் பெற்றார். 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பிடித்த நாட்டின் முதல் தடகள வீரர் என்ற பெருமையைத் தவிர, இரண்டு வெவ்வேறு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நேரடி ஒதுக்கீட்டு இடங்களை வென்ற முதல் இந்தியர் என்ற தனிச்சிறப்பையும் கான் பெற்றார்.

 

குல்மார்க்கைச் சேர்ந்த தடகள வீரரான இவர், 2011-ம் ஆண்டு உத்தரகாண்டில் நடைபெற்ற தெற்காசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788319

                                                                                                **************

 



(Release ID: 1788404) Visitor Counter : 228