பாதுகாப்பு அமைச்சகம்

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் அரசு ஊழியரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், குடும்பத்தில் தகுதியான வேறு ஒரு உறுப்பினருக்கு ஓய்வூதியத்தை வழங்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் முடிவு

Posted On: 05 JAN 2022 4:34PM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை 2021 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி வெளியிட்ட அலுவலக சுற்றறிக்கையின் படி, குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர் அரசு ஊழியரை கொலை செய்ததாகவோ அல்லது கொலைக்கு தூண்டியதாகவோ  குற்றம் சாட்டப்படுவாரானால், அந்த ஓய்வூதியத்தை குடும்பத்தில் தகுதியான வேறு ஒரு உறுப்பினருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

     இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில், ராணுவப் படையினர் ஓய்வூதியர்கள் தொடர்பான விஷயத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு, விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2021 ஜூன் 16 முதல் இதை நடைமுறைப்படுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

***************



(Release ID: 1787729) Visitor Counter : 201