சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2021 முன்முயற்சிகள் & சாதனைகள்

Posted On: 04 JAN 2022 1:27PM by PIB Chennai

இந்தியாவிலும் அதே போல் உலகம் முழுவதிலும்  உருவான கொவிட்-19 பெருந்தொற்றினை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நுண்கிருமிகள் பற்றியும், நோய் பற்றியும் இதன் நீண்ட கால தாக்கங்கள் பற்றியும் பொது சுகாதார கருவிகள், பரிசோதனைகள், சிகி்ச்சைகள், தடுப்பூசிகள் பற்றியுமான ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.

 2021 மார்ச்-மே மாதங்களில் கொவிட்-19 கடுமையாக அதிகரித்தது. இந்தியாவின் அனுபவமாக இருந்தது. இருப்பினும் 2021 மே மாதத்திற்கு பின் கணிசமான அளவு இது குறைந்ததை காண முடிந்தது. 2021 டிசம்பர் 17 நிலவரப்படி 5 மாநிலங்களில் (கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா) நாட்டில் மொத்தம் சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்திற்கு நெருக்கமாக  நோயாளிகள் இருந்தனர். இதே காலத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் நோயாளிகள் எண்ணிக்கை 25,158 ஆகவும், 10 லட்சம் மக்கள் தொகையில் இறப்பு எண்ணிக்கை  345 ஆகவும் இருந்தது. இது உலக நிலையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவானவற்றில் ஒன்றாகும்.

இந்த பெருந்தொற்றினை சமாளிக்க மிகவும் தேவைப்பட்ட வலுவான, தீர்க்கமான தலைமைத்துவத்தை மாண்புமிகு பிரதமர் வழங்கி, வழிகாட்டினார். பிரதமர் அலுவலகமும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடின. இதில் தயார் நிலை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  மேம்படுத்துவதற்கு தேவையான பகுதிகளை அடையாளம் காணுதல், ஒருங்கிணைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டன செயலாளர்களின் குழு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது.

 2021-ல் மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் 118 காணொலி காட்சி கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் பெருந்தொற்றுகளையும், தொற்று நோய்களையும் வெற்றிகரமாக கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் தேவையான உத்திகள், திட்டங்கள், நடைமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. கட்டுப்பாட்டு திட்டங்கள், நடத்தை மற்றும் சமூக உளவியல், சுகாதாரம், கண்காணிப்பு, பரிசோதனை கூட ஆதரவு, மருத்துவமனை உள்கட்டமைப்பு, மருத்துவ முழுகவச உடைகளின் சீரான பயன்பாடு போன்றவை இவற்றில் அடங்கும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசோதனை கூடங்களின் வலைப்பின்னல் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்ட நிலையில் 2022 ஜனவரி 1 நிலவரப்படி 1364 அரசு பரிசோதனை கூடங்களும், 1753 தனியார் பரிசோதனை கூடங்களும் கொவிட்-19 பரிசோதனையை நடத்துகின்றன. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் வரையிலான ரத்த மாதிரிகள் இந்தியாவில் பரிசோதிக்கப்படுகின்றன.

2021 டிசம்பர் 17 நிலவரப்படி கொவிட் சிகிச்சைக்காக மொத்தம் 23,680 மருத்துவமனைகள் செயல்பட்டன. இவற்றில் (4,94,720 ஆக்சிஜன் வசதி கொண்டது உட்பட) 18,12,017 தனிப்படுத்தப்படும் படுக்கைகளும் (65,397 வென்டிலேட்டர் வசதி கொண்டது உட்பட) 1,39,423 ஐசியூ படுக்கைகளும் உள்ளன.

 மாநிலங்களுக்கான நிதியுதவியை பொருத்தவரை 2020-21-ல் கொவிட்-19 அவசரகால பணிகள் மற்றும் சுகாதார தயார் நிலை நடைமுறைக்கான திட்டங்களுக்கு ரூ. 8257.88 கோடி விடுவிக்கப்பட்டது.

 கொவிட்-19 –ன் எதிர்கால அதிகரிப்பை கட்டுப்படுத்தும்  திறனுக்கு தயாராவது மற்றும் பொது சுகாதார அவசர தேவைகளுக்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார அடிப்படை கட்டமைப்பு இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தடுப்பூசி இயக்கத்தின் செயல்பாட்டை விரைவுப்படுத்த வீடு வீடாக சென்று தகுதியுள்ள வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 நவம்பர் 3 முதல் டிசம்பர் 31 வரை செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ கல்வியை பொருத்தவரை வரலாற்று சிறப்புமிக்க தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதையடுத்து 2020 செப்டம்பர் 25-ல் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு 1956-ன் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

 2014-ல் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் 2021-ல் 88,120 ஆக அதிகரிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களும், 2014-ஐ விட (30,185) 78 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 2021-ல் 55,595 இடங்களாக அதிகரித்தன. நாட்டில் புதிதாக 209 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு தற்போது அவற்றின் எண்ணிக்கை 596 (அரசு 313, தனியார் 283) ஆக உள்ளன.

 பல் மருத்துவ கல்வி முறையை உலகத்தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கு தேசிய பல் மருத்துவ மசோதா நகல் தயாரிக்கப்பட்டு, மாநில அரசுகள், பொது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்டோரின் கருத்துக்களுக்காக 28.1.2020 அன்று பொது வெளியில் வெளியிடப்பட்டது. 2372 கருத்துக்கள் வரப்பெற்றன. இவை பல்மருத்துவ நிபுணர்கள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு உரியமுறையில் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மசோதா தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

***************

 
 
 


(Release ID: 1787439) Visitor Counter : 902