தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் பட்டியலில் தமிழகத்திற்கு 2-வது இடம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2021 4:23PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்தப் பட்டியலின்படி டிசம்பர் 4-ந் தேதி வரை தமிழ்நாட்டில் 12,803 நிறுவனங்கள் மூலம் 5,35,615 பேர் பயனடைந்துள்ளனர். 300 கோடியே 46 லட்சத்து 76,607 ரூபாய் அவர்களுக்கு பயனாக கிடைத்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780939
****
(வெளியீட்டு அடையாள எண்: 1781041)
வருகையாளர் எண்ணிக்கை : 210