மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

நவம்பர் 21 அன்று உலக மீன்வள தினம்: மீன்வளத்தை உலகம் நிர்வகிக்கும் முறையை மாற்றி நிலையான இருப்பு மற்றும் ஆரோக்கியமான சூழலியல்களை உறுதி செய்வதன் மீது கொண்டாட்டங்கள் கவனம் செலுத்தவுள்ளன

Posted On: 20 NOV 2021 3:59PM by PIB Chennai

2021 நவம்பர் 21 அன்று உலக மீன்வள தினத்தை ஒடிசாவின் புவனேஸ்வரில் அமைந்துள்ள மன்சேஸ்வர் ரயில் அரங்கில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை கொண்டாடவுள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

மத்திய, மாநில அதிகாரிகள் மட்டுமில்லாது நாடு முழுவதிலும் இருந்து மீனவர்கள், மீன் விவசாயிகள், தொழில்முனைவோர், துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

 

துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், மீன் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன. விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் தொழில்நுட்ப அமர்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

மீன்வளத்துறையின் சாத்தியக்கூறுகளை உணர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ 20,050 கோடி மதிப்பிலான பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தை 2020 மே மாதம் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773470

----

 

 



(Release ID: 1773512) Visitor Counter : 267