சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 90 கோடியை கடந்து குறிப்பிடத்தக்க சாதனை

Posted On: 03 OCT 2021 9:25AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  73,76,846  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 90 கோடியை  (90,51,75,348) கடந்து விட்டது.  87,84,333 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25,930 பேர் குணமடைந்துள்ளதால்இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,94,529- ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் வீதம் தற்போது 97.87 சதவீதமாக உள்ளது.  கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 98 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 22, 842 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,70,557; கடந்த 199 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் சதவீதம் தற்போது 0.80 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,65,734  கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.32 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760524

*****



(Release ID: 1760566) Visitor Counter : 196