மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் வர்த்தக சபை கூட்டத்தில்(அசோசம்) மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா உரையாற்றுகிறார்

Posted On: 27 SEP 2021 1:01PM by PIB Chennai

கொவிட் தொற்றுக்கு பிந்தைய காலத்தில், மீன்வளத்துறையை புதுப்பிக்கும் தனித்துவமான அணுகுமுறை பற்றி மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு தொழில் வர்த்தக சபை கூட்டத்தில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா இன்று உரையாற்றுகிறார்.  பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் அம்சங்கள் மற்றும் மத்திய அரசின் பல திட்டங்கள் மற்றும் மீன்வளத்துறை மேம்பாடு குறித்து அவர் எடுத்துரைப்பார்.

இந்த காணொலி கருத்தரங்கின் கருப் பொருள், ‘நீல புரட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி நோக்கிய திட்டம்’.  மீன்வளத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய விஷயங்கள், புதிய யுகத்துக்குள் நுழைய தேவையான நடவடிக்கைகள், மீன்வளத்துறையில் உள்ள சமீபத்திய வாய்ப்புகள், தொழில்நுட்பம், விற்பனை, நிதி, ஏற்றுமதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி ஆராய்வதுதான் இந்த இணைய கருத்தரங்கின் நோக்கம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758504

*****************



(Release ID: 1758593) Visitor Counter : 169