வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றை சாளர அமைப்பை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

Posted On: 22 SEP 2021 2:39PM by PIB Chennai

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பைத் தொடங்குவது என்பது இந்தியாவை தற்சார்பாக்குவதற்கான ஒரு மிகப்பெரிய நடவடிக்கை ஆகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள், ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றை சாளர அமைப்பை தொடங்கி வைத்து பேசிய அவர், ஒப்புதல்கள் மற்றும் பதிவுகளுக்காக அரசு அலுவலகங்களை நோக்கி ஓடுவதில் இருந்து சுதந்திரத்தை தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு வழங்கும் என்றார்.

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின்’ 75 வாரங்களில், விடுதலையின் அமிர்தத்தை இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக முதலாளிகளோடு (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மட்டுமல்லாது உலகத்தோடும் நாம் பகிர்ந்து கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும் என்று திரு கோயல் கூறினார். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்த தளம் தற்போது வழங்கி வரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.

அனைத்து தீர்வுகளும் முழுமையாகவும் எளிதாகவும் இத்தளத்தில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வை சூழலியலில் இது கொண்டுவரும் என்றும் அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். விண்ணப்பிக்க, கண்காணிக்க மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க விண்ணப்பதாரர்டாஷ்போர்டுஇருக்கும்

உங்கள் ஒப்புதல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் (KYA), பொது பதிவு, மாநில பதிவு படிவம், ஆவண களஞ்சியம் மற்றும் -தகவல் தொடர்பு உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கும்.

தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளை மையமாக வைத்து தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756966

-----

 



(Release ID: 1757019) Visitor Counter : 306