கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரதீப் துறைமுக கழகத்தில் 15 நாள் தூய்மைப் பணி

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2021 4:11PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்துடன், 15 நாள் தூய்மை பணியையும் பாரதீப் துறைமுகக் கழகம் தொடங்கியது. பாரதீப் துறைமுக கழக துணைத் தலைவர் திரு .கே.போஸ், தூய்மை உறுதி மொழியை வாசித்தார். அனைத்து துறைத் தலைவர்களும், துணைத் தலைவர்களும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்நிர்வாக கட்டிடத்தை சுற்றிலும், பொறியில் துறையினர் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த 15 நாள் தூய்மை பணிக்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் இடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், துறைமுக வளாகத்தில் பேனர்கள் வைப்பது, நகரின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொரோனா நெருக்கடி காரணமாக சமூக இடைவெளியுடன், இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755443

 

----


(வெளியீட்டு அடையாள எண்: 1755557) வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu