உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் உணவு பதப்படுத்தல் ஆலையை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் திறந்து வைத்தார்

Posted On: 12 SEP 2021 6:33PM by PIB Chennai

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில், ‘விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தைஇந்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உணவு பதப்படுத்தல் வாரத்தை 2021 செப்டம்பர் 6 முதல் 12 வரை உணவு பதப்படுத்தல் அமைச்சகம் கொண்டாடி வருவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது.

உணவு பதப்படுத்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் சஹாரா ஃப்ரோசன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உணவு பதப்படுத்தல் ஆலையை உணவு பதப்படுத்தல் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் திறந்து வைத்தார்.

பிரதமரின் விவசாயிகள் சம்படா திட்டம் எனும் மத்திய துறை திட்டத்தின் குளிர்பதன சங்கிலி திட்டத்தின் கீழ் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்த ஆலை உள்ளூர் அளவில் அனைவருக்கும் பலன் தரும் என்று கூறினார். உள்ளூர் விவசாயிகள் மற்றும் உள்ளூர் பயிர்களுக்கு அமைச்சகம் எப்போதுமே முன்னுரிமை அளிப்பதாகவும், இந்தியாவின் உணவு பதப்படுத்தல் துறையை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

அமைச்சகத்தின் ரூ 10 கோடி மானியத்துடன், ரூ 21.09 கோடி திட்ட மதிப்பில் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. 700 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை இது வழங்குவதோடு, சுமார் 1,000 விவசாயிகளுக்கு பலனளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754350

 

------

 



(Release ID: 1754385) Visitor Counter : 255


Read this release in: English , Urdu , Hindi , Punjabi