சுற்றுலா அமைச்சகம்

குவஹாத்தியில் வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு : மத்திய அமைச்சர் பங்கேற்பு

Posted On: 11 SEP 2021 5:34PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களின், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு, குவஹாத்தியில் செப்டம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில்  மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, அசாம் முதல்வர் திரு ஹிமானந்த பிஸ்வா சர்மா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.  

இயற்கை வளம்மிக்க வடகிழக்கு மாநிலங்களில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதில்சுற்றுலாத்துறை அமைச்சகம் முக்கிய கவனம் செலுத்துகிறது.

ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களின் கீழ், சுற்றுலாத்துறை அமைச்சகம், மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில்கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி வழங்குகிறது.

வடகிழக்கு மாநிலங்களில், சுற்றுலாவை இன்னும் தீவிரமாக மேம்படுத்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் தலைமையில், குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் புதிய இடங்களை அடையாளம் காண்பதில், தீவிரமாக ஈடுபட்டுள்ள குழுவினர், புதிதாக கண்டறியும் சுற்றுலா இடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு உள்ளூர் நபர்களுக்கு, சுற்றுலா தொடர்பான திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754132

*****************



(Release ID: 1754189) Visitor Counter : 228