கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மிக அதிக அளவிலான சரக்கை ஏற்றி வந்த கப்பலைக் கையாண்டு வ. உ. சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை

Posted On: 31 AUG 2021 9:30AM by PIB Chennai

மிக அதிக அளவிலான சரக்கை ஏற்றி வந்த கப்பலைக் கையாண்டு 29.8.2021 அன்று . . சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனையைப் படைத்தது. சிங்கப்பூர் கொடி சுமந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாக்ர் துறைமுகத்திலிருந்து வந்தஎம் வி இன்ஸ் அன்காராகப்பல், செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்காக 93,719 டன் சுண்ணாம்பை ஏற்றி வந்தது. இதற்கு முன்பாக கடந்த மே மாதம் 92,935 டன் நிலக்கரியை ஏற்றி வந்த எம் வி பாஷன்ஸ் கப்பலைk கையாண்டதே மிக அதிக அளவிலான சரக்காக இருந்தது.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி துறைமுகத்தை அடைந்த கப்பலிலிருந்து மூன்று நடமாடும் சுமை தூக்கிகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகள் இறக்கப்பட்டன. அனைத்து சரக்குகளும் 29.8.2021 அன்று கப்பலிலிருந்து இறக்கப்பட்டன.

2021-22 நிதி ஆண்டில் . . சிதம்பரனார் துறைமுகம் கையாண்டு வரும் சரக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 10.58 மில்லியன் டன் சரக்குகள் இந்தத் துறைமுகத்தால் கையாளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் வரை 11.33 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு 7.14 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தின் வாயிலாகக் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஜூலை மாதம் வரை 2.69 இலட்சம் கொள்கலன்களை இந்தத் துறைமுகம் கையாண்டு முந்தைய நிதி ஆண்டை விட 21.07 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750612

*****

(Release ID: 1750612)



(Release ID: 1750725) Visitor Counter : 262