பாதுகாப்பு அமைச்சகம்

இதுவரை யாரும் தொடாத ஐந்து சிகரங்களை ஒரே சமயத்தில் எட்டும் முயற்சியில் இந்திய ராணுவக் குழு

Posted On: 11 AUG 2021 4:25PM by PIB Chennai

சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு அருகில் உள்ள தெராம்ஷேரில் இருக்கும்  இதுவரை யாரும் தொடாத ஐந்து சிகரங்களை ஒரே சமயத்தில் எட்டும் முயற்சியில் இந்திய ராணுவக் குழு ஈடுபட்டுள்ளது. இதற்கான பயணத்தை 2021 ஆகஸ்ட் 9 அன்று சியாச்சின் முகாமிலிருந்து தீயணைப்பு மற்றும் இயற்கை சீற்ற படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆகாஷ் கௌஷிக் தொடங்கிவைத்தார்.

லடாக்கில் இருந்து கிளம்பிய இந்திய ராணுவத்தின் மலையேறும் குழு, அப்சரசாஸ் I,  அப்சரசாஸ் II,  அப்சரசாஸ் III,  பிடி-6940 மற்றும் பிடி-7140 ஆகிய சிகரங்களை ஒரே சமயத்தில் தொட முயற்சிக்கும்.

சியாச்சின் முகாமில் இருந்த படைவீரர்கள் மற்றும் உள்ளூரில் வசிக்கும் இந்திய ராணுவ முன்னாள் வீரர்கள் மலையேறும் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744817

 

-----



(Release ID: 1744925) Visitor Counter : 279