சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது.

Posted On: 17 JUL 2021 10:48AM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. இன்று காலை 7 மணி வரை மொத்தம் 39,96,95,879 கோடி தடுப்பூசிகள் 50,09,914 அமர்வுகளில் போடப்பட்டன. கடந்த 24 மணிநேரத்தில்,  42,12,557 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன

இதுவரை கொவிட் பாதிப்புக்குள்ளானவர்களில், 3,02,27,792 பேர் ஏற்கனவே குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 43,916 பேர் குணமடைந்துள்ளனர்குணமடைந்தோர் மொத்த வீதம் 97.31 சதவீதமாக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து கடந்த 20 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 50,000க்கும் குறைவாக உள்ளது

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 4,24,025 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.36 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 19,98,715  கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டனநாட்டில் இதுவரை 44.20 கோடிக்கும் மேற்பட்ட (44,20,21,954) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736354

                                                                         ------



(Release ID: 1736407) Visitor Counter : 248