ரெயில்வே அமைச்சகம்

நிலைய சீரமைப்பு திட்டத்தில் ரயில்வே பெரும் முன்னேற்றம்: புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்

Posted On: 15 JUL 2021 5:58PM by PIB Chennai

நிலைய சீரமைப்பு திட்டத்தில் பெரும் முன்னேற்றத்தை இந்திய ரயில்வே அடைந்துள்ளது. நாட்டுக்கு நவீன சேவைகளை வழங்க காந்திநகர் கேப்பிடல் ரயில் நிலையம் தயாராக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

மாநகரத்திற்கு பல விதங்களில் ஊக்கம் அளிக்கவிருக்கும் காந்திநகர் கேப்பிடல் ரயில் நிலையத்தின் புத்தாக்கம், முதலீட்டு சுழற்சி, வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதோடு, குஜராத்தின் தலைநகரமான காந்திநகரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் குஜராத் அரசு மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மூலம் இந்த பிரத்தியேக திட்டம் செயல்படுத்தப்பட்டது. கருட் (காந்திநகர் ரயில்வே மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கழகம்) எனும் கூட்டு நிறுவனம் இதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவிலே முதல்முறையாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், நிலப் பற்றாக்குறை மிகுந்த நகரங்களான மும்பை மற்றும் பெங்களூருவில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வழிவகுக்கும்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, 125 நிலையங்களின் மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. இதில் 63 நிலையங்களில் இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனமும், 60 நிலையங்களில் ஆர்எல்டிஏ-வும், இரு நிலையங்களில் மண்டல ரயில்வேக்களும் பணியாற்றி வருகின்றன.

ரியல் எஸ்டேட் மேம்பாட்டுடன் சேர்த்து 123 நிலையங்களின் மறுசீரமைப்புக்கான மொத்த முதலீடு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1735916

*****************



(Release ID: 1735958) Visitor Counter : 189